tamilnadu

img

இந்தியாவின் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் கடும் சரிவு!

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ரூபாய் மதிப்புச் சரிவின் தாக்கத்தால் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

 உலகளவில் பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவற்றால் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கட்டுமானம், உலோகம், மோட்டார் வாகனம், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பெரும் சரிவைச் சந்தித்துவருகின்றன.

இந்நிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில்  650 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்து 36 ஆயிரத்து 391 புள்ளிகளாக குறைந்தது. பின்னர் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 587 புள்ளிகள் சரிவுடன் 36 ஆயிரத்து 472 புள்ளிகளாக இருக்கிறது. 

தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி வர்த்தக நேர முடிவில் 177 புள்ளிகள் சரிவுடன் 10 ஆயிரத்து 741 புள்ளிகளாக இருக்கிறது. 
 

;